என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மதுபான லாரி தீ"
வடமதுரை:
திண்டுக்கல் அருகே உள்ள முள்ளிப்பாடி பகுதியில் டாஸ்மாக் குடோன் உள்ளது இங்கிருந்து மதுபான பாட்டில்களை ஏற்றிக் கொண்டு வடமதுரை நோக்கி ஒரு லாரி வந்தது. திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலையில் தாமரைப்பாடியை அடுத்துள்ள வெள்ள பொம்மன்பட்டி பிரிவு அருகே லாரி வந்த போது 2 கார்களில் வந்த 7 பேர் அதனை மறித்தனர்.
பின்னர் லாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். அப்போது எங்கள் கட்சி தலைவர் வேல்முருகனை சிறையில் அடைத்த தமிழக அரசுக்கு கண்டனம், அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.
லாரி தீ பிடித்து எரிந்ததை பார்த்ததும் டிரைவர் சின்னதம்பி (வயது 22) அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர் இது குறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் அவர்கள் வந்து தீயை அணைப்பதற்குள் லாரியில் இருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
இது குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் டிரைவர் சின்னதம்பி புகார் அளித்தார். 2 கார்களில் வந்த 7 பேர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொடியை கட்டி இருந்ததாகவும், அவர்கள் வந்த காரின் எண்ணையும் தெரிவித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அனைத்து செக் போஸ்டுகளிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சோதனைச் சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலமும் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்